ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
நடிகை
ராஷ்மிகா மந்தனா தென்னிந்தியா மட்டுமல்லாது பாலிவுட்டிலும் அதிகம்
தேடப்படும் நடிகையாக மாறிவிட்டார். குறிப்பாக கடந்த சில மாதங்களுக்கு
முன்பு வெளியான அனிமல் திரைப்படத்தின் வெற்றி அவருக்கு பாலிவுட்டிலும்
நிறைய வாய்ப்புகளை தேடித் தந்துள்ளது. தற்போது அல்லு அர்ஜுன் நடிப்பில்
சுகுமார் இயக்கத்தில் புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வரும்
ராஷ்மிகா மும்பைக்கும் ஹைதராபாத்துக்கும் மாறி மாறி பறந்து வருகிறார். அந்த
வகையில் சமீபத்தில் மும்பையில் இருந்து ஹைதராபாத்திற்கு விமானத்தில்
கிளம்பினார் ராஷ்மிகா. அவருடன் அடுத்த இருக்கையில் கூடவே பாலிவுட் நடிகை
ஷ்ரத்தா தாஸும் இணைந்து பயணித்தார்.
விமானம் கிளம்பி முப்பதாவது
நிமிடத்தில் திடீரென ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக அவசர அவசரமாக மீண்டும்
மும்பை விமான நிலையத்தில் தரை இறக்கப்பட்டது. திடீரென ஏற்பட்ட இந்த
நிகழ்வால் ராஷ்மிகா உள்ளிட்ட பயணிகள் சற்றே அதிர்ந்து போனாலும் இதனால்
யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. இது குறித்து அந்த சமயத்தில்
எடுத்துக் கொண்ட புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ள ராஷ்மிகா,
“அதிர்ஷ்டவசமாக சாவிலிருந்து தப்பித்தோம்” என்று கூறியுள்ளார்.