நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி | சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் கயாடு லோகர், கல்யாணி பிரியதர்ஷன் | ஜப்பானில் தனுஷ், மாரி செல்வராஜ் படத்தின் படப்பிடிப்பு | சர்தார் 2 படப்பிடிப்பு நிறைவு பெற்றது |
நடிகை
ராஷ்மிகா மந்தனா தென்னிந்தியா மட்டுமல்லாது பாலிவுட்டிலும் அதிகம்
தேடப்படும் நடிகையாக மாறிவிட்டார். குறிப்பாக கடந்த சில மாதங்களுக்கு
முன்பு வெளியான அனிமல் திரைப்படத்தின் வெற்றி அவருக்கு பாலிவுட்டிலும்
நிறைய வாய்ப்புகளை தேடித் தந்துள்ளது. தற்போது அல்லு அர்ஜுன் நடிப்பில்
சுகுமார் இயக்கத்தில் புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வரும்
ராஷ்மிகா மும்பைக்கும் ஹைதராபாத்துக்கும் மாறி மாறி பறந்து வருகிறார். அந்த
வகையில் சமீபத்தில் மும்பையில் இருந்து ஹைதராபாத்திற்கு விமானத்தில்
கிளம்பினார் ராஷ்மிகா. அவருடன் அடுத்த இருக்கையில் கூடவே பாலிவுட் நடிகை
ஷ்ரத்தா தாஸும் இணைந்து பயணித்தார்.
விமானம் கிளம்பி முப்பதாவது
நிமிடத்தில் திடீரென ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக அவசர அவசரமாக மீண்டும்
மும்பை விமான நிலையத்தில் தரை இறக்கப்பட்டது. திடீரென ஏற்பட்ட இந்த
நிகழ்வால் ராஷ்மிகா உள்ளிட்ட பயணிகள் சற்றே அதிர்ந்து போனாலும் இதனால்
யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. இது குறித்து அந்த சமயத்தில்
எடுத்துக் கொண்ட புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ள ராஷ்மிகா,
“அதிர்ஷ்டவசமாக சாவிலிருந்து தப்பித்தோம்” என்று கூறியுள்ளார்.